2022 இற்கான பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட கராத்தேபோட்டி November மாதம் 4,5,6 ஆகிய திகதிகளில் கண்டி மாநகர உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் வடமாகாண கராத்தே வீரர்கள் 07 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் எமது இல்லத்தை சேர்ந்த வீரர்கள் (1வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கம்) பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Read More »

அமரர் இமயம் உயர் திரு திருநாவுக்கரசு இராசநாயகம் ஐயா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் நிறுவுனரும் தந்தையும் ஆகிய அமரர் இமயம் உயர்திரு திருநாவுக்கரசு இராசநாயகம் ஐயா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி 02.11.2022 அன்று மாலை 3.30 இற்கு எமது இல்லத்தில் சிரேஸ்ட உபதலைவர் திரு கனகரத்தினம் ஐயா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் எம் இல்ல முகாமைக்குழு உறுப்பினர்கள் பணிப்பாளர்கள் இல்ல பணியாளர்கள் முகாமையாளர்கள் மற்றும் இல்ல குழந்தைகள் கலந்து கொண்டு திருவுருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தினர் அத்துடன் இமயம் உயர்திரு. திருநாவுக்கரசு […]

Read More »

30.10.2022 அன்று அமரர் திரு. சத்தியமூர்த்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எமது இல்லத்திற்கு 50 புங்கை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது அதனை எமது இல்லக் குழந்தைகளும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள்,பணியாளர்கள் ஆகியோர் எமது இல்ல மைதானத்தை சுற்றி மரக்கன்றினை நாட்டினர். அதன் பதிவுகள் சில..

Read More »

ஆசிரியர்தின விழா- 2022

எமது மகாதேவாசுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஆசிரியர்தினவிழா 08.10.2022 அன்று பி.ப 03 மணிக்கு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டத்தில் இல்ல தலைவர் திரு.ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு. கந்தையா யுவராசா உதவிக்கல்வி பணிப்பாளர் , முன்பள்ளிக்கல்வி வலயக்கல்வி அலுவலகம் கிளிநொச்சி அவர்களும் , திரு. சின்னத்தம்பி இராமமூர்த்தி ஓய்வு நிலை நிர்வாக உத்தியோகத்தர் பிரதேச செயலகம் கிளிநொச்சி அவர்களும் எமது இல்லத்தின் சிரேஸ்ட உபதலைவர் திரு […]

Read More »

சிறுவர்தின விழா -2022

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் சிறுவர் தினவிழா 01.10.2022 அன்று பி.ப 03 மணிக்கு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இல்ல தலைவர் திரு.ச. மோகனபவன் அவர்களின் தலமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு. கௌரவ வைத்தியநாதன் தவநாதன் அவர்கள் முன்னாள் மகாணசபை உறுப்பினர் வடக்கு மாகாணம் அவர்களும் திரு.SP அமலராசா அவர்கள் உதவி திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச செயலகம் கரைச்சி அவர்களும் திரு.இ. ராஜன் சிறுவர் நன்னடத்தை தலமை காரியாலய […]

Read More »

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 1ம் , 2ம் நாள் நவராத்திரி பூசையின் பதிவுகள் சில…..

Read More »

பூப்புனித நீராட்டு விழா – 2022

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 29 பிள்ளைகளுக்கான பூப்புனித நீராட்டுவிழா எமது இல்ல தலைவர் திரு. ச. மோகனபவன் அவர்களின் தலமையில் 17.09.2022 அன்று மிகக் கோலாகலமாக இடம் பெற்றது. நிகழ்வின் பதிவுகள் சில….

Read More »

வெளியாகிய க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கலைப்பிரிவில் கல்வி கற்ற எமது இல்ல மாணவர்களான ம. தர்சினி – ACS மாவட்ட நிலை -216 காயத்திரி- B2C மாவட்ட நிலை -167 பிரசன்னா- 2CS மாவட்ட நிலை -324 ஆகிய மூவரும் பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

Read More »

பிறந்தநாள் விழா-August

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2022-August மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 28.08.2022 அன்று இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு கந்தையா கணேசலிங்கம் அவர்கள் ஓய்வுபெற்ற விவசாய போதனாசிரியர், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் உருத்திரபுரம் அவர்களும் திரு கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் கலந்து சிறப்பித்தனர் […]

Read More »