எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த முகாமைக்குழுக்கூட்டம் இல்லத்தலைவர் திரு.ச. மோகனபவன் அவர்களின் தலைமையில். 13.012024 காலை 10.00மணிக்கு சிறுவர் இல்ல விருந்தினர் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது
குறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றது இல்லத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்துதல் தொடர்பாகவும் முக்கியமான ஆலோசனை களுடனான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன அதன் பதிவுகள் சில
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கான வருடாந்த கல்விச் சுற்றுலாவானது 28 .12. 2024 அன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு
மாவட்டத்தில் பிரதான வழிபாட்டு தலமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம், அவலோன் சுற்றுலா மையம் ஆகிய இடங்கள் இதன் போது பார்வையிட்டிருநந்தன மேலும் இச் சுற்றுலாவில் இல்ல தலைவர் , பணிப்பாளர்கள் பணியாளர்கள், மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு இச் சுற்றுலாவில் இல்லக் குழந்தைகள் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பங்கு பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஒளிவிழா மற்றும் கார்த்திகை மார்கழி மாதங்களில் பிறந்தநாள் கொண்டாடும் பிள்ளைகளின் பிறந்தநாள் நிகழ்வு என்பன 22 .12. 2024 அன்று மேற்பிரிவு மகளிர் இல்ல மண்டபத்தில் பிற்பகல் 3 மணியளவில் இல்ல தலைவர் திரு ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் அருட்தந்தை அ. யோன் கனிசியுஸ் அடிகளார் பங்குத்தந்தை உருத்திரபுரம் அவர்களின் பங்குபற்றுதலுடனும் அவர்தம் ஆசியுடனும் நிகழ்வு ஆரம்பமானது.
இந்நிகழ்வில் எமது இல்ல சிரேஸ்ர உபதலைவர் , முகாமைக்குழு உறுப்பினர்கள் , இல்லக் குழந்தைகள், பணிப்பாளர்கள் , பணியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்
பிறந்தநாள் கொண்டாடிய குழந்தைகளுக்கு இனிப்பூட்டி வாழ்த்தி மகிழ்வதோடு பரிசில்களும் வழங்கப்பட்டன அத்தோடு ஒளி விழாவை சிறப்பிக்கும் முகமாக கிறிஸ்துமஸ் தாத்தா வருகைதந்து குழந்தை களை மகிழ்வித்தார் . அத்தோடு இல்ல குழந்தைகளின் கலை நிகழ்வுகம் இடம்பெற்றது.
(14.12 .2024) நேற்றைய தினம் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல சிறார்களால் கார்த்திகைத் தீபத்திருநாள் தீபங்கள் ஏற்றி மகிழ்வுடன் கொண்டாடப்பட்டதன் பதிவுகள்
, 08.12.2024. அன்று இலங்கை கராத்தே சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பொது உள்ளக விளையாட்டரங்கில் மாவட்ட மட்ட கராத்தே போட்டிகள் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்ட எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல கராத்தே அணியினர் சிறப்பாக செயற்பட்டு சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டனர். தங்கம் -10 வெள்ளி – 06 வெண்கலம் – 04 மேலும் இப்போட்டியில் தங்கம் , வெள்ளி பெற்ற 16 மாணவர்கள் தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திலிருந்து 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வையிட்டு 22.11.2024அன்று எமது மாகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல சர்வசக்தி அம்மன் ஆலயத்தில் பொங்கள் நிகழ்வுகளுடன் பூஜை இடம்பெற்று பின்னர் குழந்தைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் இல்ல தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எமது இல்ல பணிப்பாளர்கள் , பணியாளர்கள் , ஆசிரியர்கள் கலந்து கொண்டு பிள்ளைகளை வாழ்த்தி ஆசி வழங்கினர். அதன் பதிவுகள் சில
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகரும் தந்தையுமாகிய அமரர் இமயம் உயர்திரு திருநாவுக்கரசு இராசநாயகம் ஐயா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி நினைவு நாளான 02.11.2024 அன்று மாலை 4:30 மணிக்கு இல்ல தலைவர் திரு ச. மோகனபவன் அவர்களின் தலைமையின் ஆரம்பமானது . முதலில் இந்நிகழ்வையிட்டு எமது ஜெயந்திநகர் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நினைவுச் சுடரேற்றி மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து புதுமுறிப்பு சிறுவர் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு இல்ல தலைவர் ,முகாமைக்குழு உறுப்பினர்கள் , பணியாளர்கள் இல்ல குழந்தைகள் ,பழைய மாணவர்கள் ஆகியோரால் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அமரர் இராசநாயகம் ஐயா அவர்களின் தன்னலமற்ற சேவைகள் ,நற்பணிகள் தொடர்பாகவும் நினைவு பேருரைகள் மற்றும் இல்ல குழந்தைகளின் கவிதைகள், நினைவுப் பாடல்கள், என்பன நிகழ்த்தப்பட்டதுடன் உயர் திரு இராசநாயகம் ஐயா அவர்களின் நினைவை முன்னிட்டு இல்ல குழந்தைகளிடையே மேடைப்பேச்சு ,பாடல், கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது அதன் பதிவுகள் சில.
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் சிறுவர் தினம், ஆசிரியர் தினம் , சாதனை மாணவர்கள் கெளரவிப்பு மற்றும் மற்றும் ஆடி, ஆவணி, புரட்டாதி ,ஐப்பசி மாதங்களில் பிறந்தநாள் கொண்டாடும் பிள்ளைகளின் பிறந்த நாள் நிகழ்வுகள் என்பன 26 .10. 2024 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இல்லத் தலைவர் திரு ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் எமது இல்ல வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி பிரதீபாகாயத்திரி கஜபதி வலயக்கல்வி பணிப்பாளர் தெற்கு வலயம் கிளிநொச்சி அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு ப .கஜேந்திரன் கணக்காளர் மாவட்ட சமுர்த்தி அலுவலகம் கிளிநொச்சி அவர்களும் கௌரவ விருந்தினர்களாக திரு இ. இராஜன் தலைமை காரியாலய உத்தியோகத்தர் சிறுவர் நன்னடத்தை திணைக்களம் வடக்கு மாகாணம் அவர்களும் திரு அ. ரெஜினோல்ட்ராஜ் நிலையைப் பொறுப்பு நன்னடத்தை உத்தியோகத்தர் மாவட்ட சிறுவர் நன்னடத்தை திணைக்களம் கிளிநொச்சி அவர்களும் விருந்தினர்களாக திருமதி மீனலோஜினி இதயசிவதாஸ் அதிபர் கிளிநொச்சி இந்து கல்லூரி அவர்களும் மற்றும் எமது இல்ல செயலாளர் ,இல்ல சிரேஸ்ர உபதலைவர், ,உபதலைவர் , இல்ல முகாமைக்குழு உறுப்பினர்கள், பணிப்பாளர்கள், பணியாளர்கள் இல்ல குழந்தை கலந்து சிறப்பித்தனர். மேலும் சாதனை மாணவர்களுக்கான கௌரவிப்பும் விருந்தினர் கௌரவிப்பும் இடம்பெற்றதுடன் பிறந்தநாள் கொண்டாடிய குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டதுடன் இல்ல குழந்தைகளின் கலை நிகழ்ச்சியும் இடம்பெற்றது அதன் பதிவுகள் சில.
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த முகாமைக்குழுக்கூட்டம் இல்லத்தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் இன்று 17.10.2024(வியாழக்கிழமை ) காலை 10 .30 மணிக்கு சிறுவர் இல்ல விருந்தினர் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது குறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றது இல்லத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்துதல் தொடர்பாகவும் முக்கியமான ஆலோசனை களுடனான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன…..அதன் பதிவுகள் சில📸
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் நேற்றைய தினம் (12.10.2024) மேற்பிரிவுமகளிர் , ஆரம்ப பிரிவுமகளிர் மற்றும் முறிப்பு ஆண்கள் இல்லத்தில் விஜயதசமி பூஜை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றதுடன் புதிய மாணவர்களுக்கான வித்தியாரம்பம்.மற்றும் கலை பயிற்சி வகுப்புகள் கலைத்துறைசார் ஆசிரியர்களால் ஆரம்பிக்கப்பட்டன அதன் பதிவுகள் சில