பிறந்தநாள் விழா-August

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2022-August மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 28.08.2022 அன்று இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு கந்தையா கணேசலிங்கம் அவர்கள் ஓய்வுபெற்ற விவசாய போதனாசிரியர், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் உருத்திரபுரம் அவர்களும் திரு கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் கலந்து சிறப்பித்தனர் . நிகழ்வின் குழந்தைகளுக்கு இனிப்பூட்டி வாழ்த்தி மகிழ்வித்ததோடு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டது .

பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.

நிகழ்வின் பதிவுகள் சில…