துயர் பகிர்கின்றோம் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் தலைவரும் இல்லக் குழந்தைகளின் பாசத்திற்குரிய தந்தையும் முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருமான உயர்திரு. தி. இராசநாயகம் ஐயா அவர்கள் சிவபதமடைந்த செய்தி கேட்டு ஆறாத் துயரடைகின்றோம். கள்ளமில்லா நல்லுள்ளமும் கனிவான நின்பார்வையும் புன்னகை  பூத்த பொன்முகமும் அன்போடு அனைவரையும் அரவணைக்கும் பண்பையும் உமையிழந்தபோது இனியாரிடம் நாம் காண்போம்……! மின்னியது செய்தி விம்மினோம் -நெடிதுயர் பின்னியது நெஞ்சில் -கலங்கினோம் என்னது இது? ஏன் மறைந்தீர்? […]

Read More »

தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவன் சாதனை

எமது இல்லத்தில் தங்கியிருந்து கிளி/புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலத்தில் கல்வி பயின்று 2017ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில்  பரீட்சையில் 162 புள்ளிகளைப்  பெற்று  சித்தியடைந்த செல்வன் தமிழ்பிரியன் அவர்கள் எமது இல்லத்திற்கு பெருமை சேர்த்துள்ளதுடன் தொடர்ந்தும் ஏனைய மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.  இவருக்கு எமது இதயபூர்வமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன் இவரது முயற்சிக்கு என்றும் தலை சாய்க்கின்றோம். இவருக்கு ஊக்கமளித்த இல்லப் பொறுப்பாளர் கல்வி கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள். தலைவர் தி. இராசநாயகம் அவர்கள், பணிப்பாளர்கள், பணியாளர்கள் […]

Read More »

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தையிட்டு அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் சிறுவர் மற்றும் முதியோர் கௌரவிப்பு விழா இல்லத்தின் தலைவர் திரு. தி. இராசநாயகம் மற்றும் பதில் தலைவர் திரு. பொன். நித்தியானந்தம் ஆகியோரின் தலைமையில் இன்று 01.10.2017 நடைபெற்றது. இதன்போது வன்னேரிக்குளம், யோகர்சுவாமிகள் திருவடி நிலைய முதியோர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வில் எமது இல்லச் சிறுவர்கள் மற்றும் யோகர்சுவாமிகள் திருவடி நிலைய முதியோர்கள் கௌரவிக்கப்படுவதையும் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தையிட்டு அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் சிறுவர் மற்றும் முதியோர் கௌரவிப்பு விழா இல்லத்தின் தலைவர் திரு. தி. இராசநாயகம் மற்றும் பதில் தலைவர் திரு. பொன். நித்தியானந்தம் ஆகியோரின் தலைமையில் இன்று 01.10.2017 நடைபெற்றது. இதன்போது வன்னேரிக்குளம், யோகர்சுவாமிகள் திருவடி நிலைய முதியோர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வில் எமது இல்லச் சிறுவர்கள் மற்றும் யோகர்சுவாமிகள் திருவடி நிலைய முதியோர்கள் கௌரவிக்கப்படுவதையும் […]

Read More »

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம்- பொதுக் கூட்டம் -2017.09.10

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் பொதுக் கூட்டம் -2017.09.10 மேற்படி சிறுவர் இல்லத்தின் பொதுக் கூட்டம் இன்று (10.09.2017) காலை 9:00 மணிக்கு சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இறைவணக்கத்துடன் ஆரம்பமாகிய இக் கூட்டத்தில் முதலில் தவத்திரு கணேசானந்த மகாதேவா சுவாமிகள் சமாதி எய்தியமை நினைவு கூரப்பட்டு மௌன அஞ்சலி பிரார்த்தனையும் இடம் பெற்றது. குறித்த பொதுக் கூட்டத்தில்  உயர் அதிகாரிகளும் ஓய்வு நிலை அதிகாரிகளும் சமூகத் தொண்டர்களுமாக பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சி நிரலின் […]

Read More »

யாழ் விருது பெற்ற முன்னாள் அரசாங்க அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் தந்தையும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் வடமாகாண பொது நிருவாக உள்ளுராட்சி அமைச்சின் முன்னாள் செயலாளருமான உயர்திரு. தி. இராசநாயகம் அவர்கள் யாழ் விருது பெற்றமையை கௌரவிக்கும் வகையில் பணிநயப்பும் “இமயம்” பாராட்டு மலர் வெளியீடும் 19.08.2017 (சனிக்கிழமை) இல்ல வளாகத்தில் முன்னை நாள் கரைச்சி பிரதேச செயலரும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் விசேட ஆணையாளருமான திரு. பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமயில் ஆரம்பமானது. இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள் அனைவரும் விழாநாயகனை மலர் மாலை அணிவித்து வரவேற்பதனையும் மங்கல விளக்கேற்றப்படுவதையும் நிகழ்வுகளின் சில பதிவுகளையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு மாவை. சேனாதிராஜா அவர்கள், மாண்புமிகு சி. சிறிதரன் அவர்கள், வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் மாண்புமிகு அனந்தி சசிதரன் அவர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள் மாண்புமிகு. வை. தவநாதன் அவர்கள், மாண்புமிகு இ. ஜெயசேகரன் அவர்கள், மாண்புமிகு ப. அரியரத்தினம் அவர்கள், வட மாகாண முன்னை நாள் பிரதம செயலாளரும் ஆளுனர் செயலாளரும் ஆலோசகருமான திரு. சி இரங்கராசா அவர்கள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உயர்திரு. சி. சத்தியசீலன் அவர்கள், வட மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் திரு. தி. விஸ்வரூபன் அவர்கள், காணி உரித்து நிர்வாகத் திணைக்கள உதவி ஆணையாளர் திரு. சி. பத்மசிறி அவர்கள், கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. ஆர் .சி. அமல்ராஜ் அவர்கள், கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு. ச. மோகனபவன் அவர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. அ. கேதீஸ்வரன் அவர்கள், கிளிநொச்சி மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. தி. குயின்டஸ் அவர்கள், கரைச்சி பிரதேச செயலர் திரு. கோ. நாகேஸ்வரன் அவர்கள், மூத்த எழுத்தாளர் திரு. நா. யோகேந்திரநாதன் அவர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் விருது பெற்ற முன்னாள் அரசாங்க அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் தந்தையும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் வடமாகாண பொது நிருவாக உள்ளுராட்சி அமைச்சின் முன்னாள் செயலாளருமான உயர்திரு. தி. இராசநாயகம் அவர்கள் யாழ் விருது பெற்றமையை கௌரவிக்கும் வகையில் பணிநயப்பும் “இமயம்” பாராட்டு மலர் வெளியீடும் 19.08.2017 (சனிக்கிழமை) இல்ல வளாகத்தில் முன்னை நாள் கரைச்சி பிரதேச செயலரும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் விசேட ஆணையாளருமான […]

Read More »