துயர் பகிர்கின்றோம்

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் தலைவரும் இல்லக் குழந்தைகளின் பாசத்திற்குரிய தந்தையும் முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருமான உயர்திரு. தி. இராசநாயகம் ஐயா அவர்கள் சிவபதமடைந்த செய்தி கேட்டு ஆறாத் துயரடைகின்றோம்.

கள்ளமில்லா நல்லுள்ளமும் கனிவான நின்பார்வையும்

புன்னகை  பூத்த பொன்முகமும் அன்போடு அனைவரையும்

அரவணைக்கும் பண்பையும் உமையிழந்தபோது

இனியாரிடம் நாம் காண்போம்……!

மின்னியது செய்தி

விம்மினோம் -நெடிதுயர்

பின்னியது நெஞ்சில் -கலங்கினோம்

என்னது இது? ஏன் மறைந்தீர்?

எம் பாரினில் உமக்கேற்ற இத்துன்பமோ

யாராலும் ஏற்றிட முடியுமோ?

இறைவனுக்கு உம்மை அழைக்கும் அவசரம் ஏன்?

அன்பரீர் உங்கள் ஆத்மா இளைப்பாற

விண்ணவனைப் பணிகின்றோம்  நாம்.

 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

பணிப்பாளர்கள், பணியாளர்கள், இல்லக் குழந்தைகள்