இல்ல பிள்ளைகள் ஏழு பேருக்கான பூப்புனித நீராட்டு விழா 09.11.2023

இல்ல பிள்ளைகள் ஏழு பேருக்கான பூப்புனித நீராட்டு விழா 09.11.2023

எமது இல்லத்தினால் பராமரிக்கப்பட்டு வரும் ஏழு சிறுமிகளுக்கான பூப்புனித நீராட்டு விழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக சமய சம்பிரதாய கலாச்சார விழுமியங்களுக்கேற்ப சுப நேரத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில் இல்லத்தின் நலன்விரும்பிகள், நன்கொடையாளர்கள், திணைக்களங்களுடைய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் இல்லத்தினுடைய குழந்தைகள் பணியாளர்கள், பணிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் குழந்தைகளுக்கு வாழ்த்துகளையும் ஆசிர்வாதத்தினையும் வழங்கி மகிழ்ந்திருந்தனர்

இந் நிகழ்விற்கு சகல வழிகளிலும் நிதி உதவிகளையும் ஆதரவினையும் வழங்கியிருந்த நல் உள்ளம் கொண்ட எம் நன்கொடையாளர்களுக்கு எமது இதய பூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களினையும் இல்ல குழந்தைகள் சார்பாக தெரிவித்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்

அதன் பதிவுகள் சில