கணினிப் பயிற்சி நிலையத் திறப்பு விழாவும் ‘புதிய சரிதம்’ சஞ்சிகை வெளியீடும்-2022

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் குழந்தைகளுக்கான கணினிப் பயிற்சி நிலையமானது பிரமாண்டமான முறையில் 30.03.2022 அன்று பி.ப.2.30 மணியளவில் இல்ல தலைவர் ச.மோகனபவன் அவர்களின் தலமையில் திரு.எஸ்.எம்.சமன்பந்துலசேன பிரதம செயலாளர் வடமாகாணம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது அத்துடன் சிரேஸ்ர மகளிர் இல்லத்தினரால் ‘புதிய சரிதம்’ சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வின் விருந்தினர்களாக திரு.இராஜேந்திரம் குருபரன் ஆணையாளர் நன்னடத்தை பாதுகாவல் மற்றும்  சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் வடமாகாணம் அவர்களும் மதகுருமார்கள் மற்றும் முகாமைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். அத்துடன் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. 

MSCH