எமது மகாதேவா சுவாமிகள் மகளிர் இல்லத்தின் உப முகாமைக்குழு உறுப்பினரும் நலன் விரும்பியும் இல்லக் குழந்தைகளினதும் சிறுவர் இல்லத்தினதும் வளர்ச்சிக்காக மிகவும் அர்ப்பணிப்போடு தன்னலமற்ற சேவையாற்றி மீளாதுயில் கொண்டுள்ள அமரர் செல்வராசா.குமாரவேல் (பாவு) அவர்கள் 27.01.2024 இன்று இறைவனடி சேர்ந்தமையினையிட்டு ஆறாத்துயரடைகின்றோம்.
அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அன்னாரது ஆத்மா எல்லாம் வல்ல உருத்திரபுரிஸ்வரர் பாதங்களில் சங்கமமாகி நித்திய வாழ்வு பெறவும் பிரார்த்திக்கின்றோம்