வருடாந்த இல்ல மெய் வல்லுநர் திறனாய்வுப் போட்டி – 2023

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி 09.04.2013 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.30 மணியளவில் எமது இல்லத்தின் விளையாட்டு மைதானத்தில் எமது இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக திரு இராஜேந்திரம் குருபரன் மாகாண ஆணையாளர் சிறுவர் நன்னடத்தை பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் வட மாகாணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு அ.பங்கையற்செல்வன் முதல்வர் கிளி /வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக திரு பெருமாள் சந்திரகுமாரன் கிளி கட்டடப் பொருட்கள் உற்பத்தி விற்பனை நிலையம் அவர்களும் திரு பரமராசா சுபாஸ்கரன் பரமராசா பான்சி கவுஸ் அவர்களும்
மற்றும் முகமைக்குழு உறுப்பினர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் எமது இல்ல பணியாளர்கள் , பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் குழந்தைகளின் விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் சிறப்புடன் நடைபெற்றன.

நிகழ்வின் பதிவுகள் சில