கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 2016 மார்கழி மாதம் பிறந்த நாளைக் கொண்டாடும் குழந்தைகளின் பிறந்த நாள் விழா 24.12.2016 சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது வருகை தந்திருந்த பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை இல்லத் தலைவர் திரு. தி. இராசநாயகம் அவர்களும் இல்லக்குழந்தைகளும் மலர்மாலை அணிவித்து வரவேற்பதனையும் மங்கல விளக்கேற்றப்படுவதையும் பிரதம விருந்தினர் குழந்தைகளுக்கு இனிப்பூட்டுவதையும் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாண்புமிகு ஆ. நடராஜன், பிரதி உயர் தூதுவர், இந்திய தூதுவராலயம், யாழ்ப்பாணம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More »

இல்லக் குழந்தைகளின் பிறந்த நாள் விழா-2016 ஆடி, ஆவணி

  கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 28.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று  ஆடி, ஆவணி மாதத்தில்  பிறந்த இல்லக் குழந்தைகளுக்கான பிறந்த நாள் விழா இடம்பெற்றது. இதன்போது வருகை தந்திருந்த பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை இல்லக்குழந்தைகள் மலர்மாலை அணிவித்து வரவேற்பதனையும் மங்கல விளக்கேற்றப்படுவதையும் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும்  சாம ஶ்ரீ தேசமானிய விருது பெற்றவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வையும் படங்களில் காணலாம்.  

Read More »