இல்லத்தின் ஸ்தாபகர் அமரர் உயர்திரு திருநாவுக்கரசு இராசநாயகம் ஐயா அவர்களின் ஜனன தினம் 01.05.02025

எமது இல்லத்தின் ஸ்தாபகர் அமரர் உயர்திரு திருநாவுக்கரசு இராசநாயகம் ஐயா அவர்களின் ஜனன தினத்தையிட்டு 01.05.2025 அன்று எமது ஜெயந்திநகர் இல்ல வளாகம் மற்றும் புது முறிப்பு இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள இராசநாயகம் ஐயா அவர்களின் திருவுருவச்சிலைக்கு முகாமைக்குழு உறுப்பினர்கள், பணியாளர்கள் ,இல்ல குழந்தைகள் ,பழைய மாணவர்கள் ஆகியோரால் அஞ்சலி செலுத்தப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் இராசநாயகம் ஐயா அவர்களின் தன்னலமற்ற சேவைகள் , நற்பணிகள் தொடர்பாகவும் உரைகள் நிகழ்த்தப்பட்டன .அதனை தொடர்ந்து எமது இல்லத்தின் பழைய மாணவர்களான மகாதேவா விழுதுகள் அமைப்பின் ஏற்பாட்டில் புதுமுறிப்பு சிறுவர் இல்ல வளாகத்தில் இராசநாயகம் ஐயா அவர்களின் ஞாபகார்த்த மாபெரும் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது .இக் குருதிக் கொடைமுகாமில் பழைய மாணவர்கள், பணியாளர்கள், நலன்விரும்பிகள் , என 50ற்கும் மேற்பட்டோர் குருதிதானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது இக்குருதிகள் யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பு மருத்துவர் தலைமையிலான குழுவினரால் பெறப்பட்டது.அதன் பதிவுகள் சில