பிறந்தநாள் விழா

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் COVID-19 காரணமாக தடைப்பட்டிருந்த பிறந்தநாள் கொண்டாட்டம் (கடந்த 10ம் மாதம் தொடக்கம் 2022-தை வரையான பிறந்தநாள் நிகழ்வானது) 30.01.2022 நேற்றய தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக வைத்திய கலாநிதிகள் திரு.திருமதி இ.கிஸ்ணலிங்கம் அனுசா தம்பதியினர் (மாவட்ட வைத்தியசாலை-கிளிநொச்சி) தமது குழந்தைகளுடன் கலந்து சிறப்பித்தனர் அத்துடன் சிறப்பு விருந்தினராக எமது இல்லத்தின் நீண்டகாலமாக முகாமைக்குழுவில் பதவி வகிக்கும் இல்லத்தின் உபதலைவரான திரு.S.யசோதரன் அவர்களும் (தொழிலதிபர்-கிளிநொச்சி மாவட்டம்) கலந்து சிறப்பித்தனர். 
விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.
குழந்தைகளுக்கு பரிசில்களும், பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன. மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.