பிறந்தநாள் விழா-July

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2022-july மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 07.08.2022 அன்று இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு திருமதி விநாயகமூர்த்தி விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் மாலதி அவர்கள் நோர்வே அவர்களும் திரு கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் கலந்து சிறப்பித்தனர் . நிகழ்வின் குழந்தைகளுக்கு இனிப்பூட்டி வாழ்த்தி மகிழ்வித்ததோடு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டது .

பிரதமவிருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். அத்துடன் எமது இல்லத்தில் சிறுவயதில் இருந்து கராத்தே பயின்று வந்த த. சானுயா , ந. சர்மிளா ஆகியோருக்கு கறுப்பு பட்டி பரீட்சையில் திறமை சித்தி பெற்றமையினால் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர் சென்சே. விஜயராஜ் அவர்களினால் கறுப்பு பட்டி சான்றிதல் வழங்கப்பட்டது.

நிகழ்வின் பதிவுகள் சில….