தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவன் சாதனை

எமது இல்லத்தில் தங்கியிருந்து கிளி/புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலத்தில் கல்வி பயின்று 2017ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில்  பரீட்சையில் 162 புள்ளிகளைப்  பெற்று  சித்தியடைந்த செல்வன் தமிழ்பிரியன் அவர்கள் எமது இல்லத்திற்கு பெருமை சேர்த்துள்ளதுடன் தொடர்ந்தும் ஏனைய மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.  இவருக்கு எமது இதயபூர்வமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன் இவரது முயற்சிக்கு என்றும் தலை சாய்க்கின்றோம். இவருக்கு ஊக்கமளித்த இல்லப் பொறுப்பாளர் கல்வி கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.

தலைவர் தி. இராசநாயகம் அவர்கள், பணிப்பாளர்கள், பணியாளர்கள் , இல்லக்குழந்தைகள், மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம்

ஜெயந்திநகர், கிளிநொச்சி