முகாமைக்குழுக் கூட்டம் -27.05.2018

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த முகாமைக்குழுக் கூட்டம் தலைவர் திரு.பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமையில் இன்று (27.05.2018) காலை 10:00 மணிக்கு சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது. குறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் சிறப்புற நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மானங்களும் செயற்றிட்டங்களை அமுலாக்கும் விடயங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதோடு இக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்களின் புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளோம். […]

Read More »

இல்லக் குழந்தைகளின் சித்திரை மாத பிறந்த நாள் விழா -2018

கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 2018 சித்திரை மாதம் பிறந்த நாளைக் கொண்டாடும் குழந்தைகளின் பிறந்த நாள் விழா 30.04.2018 திங்கட் கிழமை இன்று இடம்பெற்றது. இதன்போது வருகை தந்திருந்த பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை இல்லக்குழந்தைகள் மலர்மாலை அணிவித்து வரவேற்பதனையும் மங்கல விளக்கேற்றப்படுவதையும் குழந்தைகளுக்கு இனிப்பூட்டுவதையும் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. மு. முத்துக்குமாரன் (பொறுப்பதிகாரி, மாவட்ட சிறுவர் நன்னடத்தை […]

Read More »

இல்லக் குழந்தைகளின் பிறந்த நாள் விழா- பங்குனி 2018

கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 2018 பங்குனி மாதம் பிறந்த நாளைக் கொண்டாடும் குழந்தைகளின் பிறந்த நாள் விழா 25.03.2018 ஞாயிற்றுக் கிழமை இன்று இடம்பெற்றது. இதன்போது வருகை தந்திருந்த பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை இல்லக்குழந்தைகள் மலர்மாலை அணிவித்து வரவேற்பதனையும் மங்கல விளக்கேற்றப்படுவதையும் குழந்தைகளுக்கு இனிப்பூட்டுவதையும் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளி/ கிளிநொச்சி இந்து ஆரம்பப் பாடசாலை முதல்வர் திரு. […]

Read More »

2018 தை மாதம் பிறந்த நாளைக் கொண்டாடும் குழந்தைகளின் பிறந்த நாள் விழா

கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 2018 தை மாதம் பிறந்த நாளைக் கொண்டாடும் குழந்தைகளின் பிறந்த நாள் விழா 28.01.2018 ஞாயிற்றுக் கிழமை இன்று இடம்பெற்றது. இதன்போது வருகை தந்திருந்த பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை இல்லக்குழந்தைகள் மலர்மாலை அணிவித்து வரவேற்பதனையும் மங்கல விளக்கேற்றப்படுவதையும் குழந்தைகளுக்கு இனிப்பூட்டுவதையும் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்தியக் கலாநிதி இராமநாதன் கிருஸ்ணலிங்கம் (மாவட்ட வைத்தியசாலை, கிளிநொச்சி) […]

Read More »

நெருக்கடியான காலம் தொட்டு எமது குழந்தைகளுக்காக தொடர்ச்சியாக உதவி வரும் மனிதநேயம் நிறுவனத்தினுடைய (கொழும்பு) தலைவர் திருமதி அபிராமி கைலாசபிள்ளை அவர்களும் அவருடைய மகன் திரு. அரவிந்தன், மனிதநேயம், அமெரிக்கா, மற்றும் குருகுகன் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், அமெரிக்கா அவர்களும் இன்று 06.01.2018 எமது இல்லத்திற்கு வருகை தந்து குழந்தைகளையும் இல்லச் செயற்பாடுகளையும் பார்வையிட்டுச் சென்றனர்.

நெருக்கடியான காலம் தொட்டு எமது குழந்தைகளுக்காக தொடர்ச்சியாக உதவி வரும் மனிதநேயம் நிறுவனத்தினுடைய (கொழும்பு) தலைவர் திருமதி அபிராமி கைலாசபிள்ளை அவர்களும் அவருடைய மகன் திரு. அரவிந்தன், மனிதநேயம், அமெரிக்கா, மற்றும் குருகுகன் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், அமெரிக்கா அவர்களும் இன்று 06.01.2018 எமது இல்லத்திற்கு வருகை தந்து குழந்தைகளையும் இல்லச் செயற்பாடுகளையும் பார்வையிட்டுச் சென்றனர்.

Read More »

க. பொ.த உயர்தரப் பரீட்சையில் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்கள் சாதனை

எமது இல்லத்தில் தங்கியிருந்து கிளி/கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் கல்வி பயின்று 2017ம் ஆண்டு நடைபெற்ற க. பொ. த. உயர்தரப் பரீட்சையில்  கலைப் பிரிவில் மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தியடைந்து (3A) கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலையினையும் தேசிய ரீதியில் 253வது நிலையினையும் பெற்று செல்வன் ச. வில்லரசன் அவர்கள் எமது இல்லத்திற்கும் பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதுடன் தொடர்ந்தும் ஏனைய மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளார். மேலும் இல்ல மாணவர்களான செல்வன். மொ. கனிஸ்ரன் கிறிஸ்டி அவர்கள் கலைப்பிரிவில் 2B […]

Read More »

    துயர் பகிர்கின்றோம் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் தலைவரும் இல்லக் குழந்தைகளின் பாசத்திற்குரிய தந்தையும் முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருமான உயர்திரு. தி. இராசநாயகம் ஐயா அவர்கள் சிவபதமடைந்த செய்தி கேட்டு ஆறாத் துயரடைகின்றோம். கள்ளமில்லா நல்லுள்ளமும் கனிவான நின்பார்வையும் புன்னகை  பூத்த பொன்முகமும் அன்போடு அனைவரையும் அரவணைக்கும் பண்பையும் உமையிழந்தபோது இனியாரிடம் நாம் காண்போம்……! மின்னியது செய்தி விம்மினோம் -நெடிதுயர் பின்னியது நெஞ்சில் -கலங்கினோம் என்னது இது? ஏன் மறைந்தீர்? […]

Read More »