திருக்குறள் விழா 2021

24.12.2021 வடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் தினணக்கள அனுசரனையில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் நடாத்திய              கிளிநொச்சி மாவட்ட  திருக்குறள் விழாவில் கலை நிகழ்வுகளின் வரிசையில் எமது இல்ல குழந்தைகளின் மயில் நடனம் அரங்கேறியது. அனைவரையும் மகிழ்வித்து பெரும் பாராட்டினை பெற்றது.

Read More »

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கராத்தே போட்டி

2020ற்கான வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கராத்தே போட்டி16.12.2021 முல்லைத்தீவில் அமைந்துள்ள உள்ளக விளையாட்டுத்திடலில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குகொண்ட சர்வதேச சக்குறா சோட்டோக்கான் கராத்தே சங்கத்தின் (ISSKA) யாழ்/கிளி/முல்லை கராத்தே அணியினர் 9தங்கம்,8வெள்ளி உட்பட 22பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் 3 தங்கம்2வெள்ளிப் பதக்கங்கள் எமது இல்லக் குழந்தைகளுக்கு கிடைத்துள்ளது.

Read More »

ஆண்டு இறுதி விழா 2021

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் சிறிய மகளிர் பிரிவினரால் 2021 வருட இறுதி ஒன்று கூடல் நிகழ்வு 19.12.2021ம்  திகதி பி.ப 4.00 மணிக்கு நடாத்தப்பட்டது இதில் தலைவர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் போது சிறிய மகளிர் பிரிவினரால் விருந்தினர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Read More »

முகாமைக் குழுக்கூட்டம்- 18.12.2021

முகாமைக் குழுக்கூட்டம்- 18.12.2021 எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (December-2021) முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் (18.12.2021) காலை 10:00 மணிக்கு சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது. குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்பகூட்டம் சிறப்புற நடைபெற்றது. இதில் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பது தொடர்பாகவும் முக்கிய தீர்மானங்களும் செயற்றிட்டங்களை அமுலாக்கும் விடையங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Read More »

கல்விக் குழுக்கூட்டம்- 24.02.2019

கல்விக் குழுக்கூட்டம்- 24.02.2019 எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (மாசி-2019) கல்விக் குழுக்கூட்டம் தலைவர் திரு.பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமையில் இன்று (24.02.2019) காலை 9:00  மணிக்கு சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது. குறித்த கூட்டத்தில் எமது இல்ல கல்விக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் சிறப்புற நடைபெற்றது. இதில் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால செயற்றிட்டங்கள் சம்பந்தமான விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதோடு இக்கூட்டத்தில் […]

Read More »

புதிர் வழங்கும் நிகழ்வு

எமது இல்லக் குழந்தைகளின் உணவுக்கென நன்கொடையாளர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நெற்காணிகளில் கடந்த வருடம் கால போக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு 16.02.2019 இன்று  புதிய நெல்லில் சமைக்கப்பெற்ற புதிர்ப்பொங்கல் இல்லக் குழந்தைகளுக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் இல்லத்தலைவர் பொன். நித்தியானந்தம் ஐயா மற்றும் இல்லத்தின் உபதலைவர் திரு. அ. கனகரத்தினம் ஐயா அவர்களையும் இல்லப் பணியாளர்களையும்  படத்தில் காணலாம்.

Read More »

2018 ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மற்றும் 2019 தை மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் விழா

  கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 2018 ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மற்றும் 2019 தை மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் விழா 15.02.2019 வெள்ளிக்கிழமை இன்று இடம்பெற்றது. இதன்போது வருகை தந்திருந்த பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை இல்லக்குழந்தைகள் மலர்மாலை அணிவித்து வரவேற்பதனையும் மங்கல விளக்கேற்றப்படுவதையும் குழந்தைகளுக்கு இனிப்பூட்டுவதையும் இல்லக்குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. சின்னையா வதனகுமார் (பொறியியலாளர், வீதி அபிவிருத்தி […]

Read More »

முகாமைக் குழுக்கூட்டம்- 27.01.2019

முகாமைக் குழுக்கூட்டம்- 27.01.2019 எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (தை-2019) முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமையில் இன்று (27.01.2019) காலை 10:30 மணிக்கு சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது. குறித்த கூட்டத்தில்  எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் சிறப்புற நடைபெற்றது. வட மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) திரு. ஆர். பத்மநாதன் அவர்கள் இக் கூட்டத்தில் […]

Read More »

நெற் புதிர் எடுக்கும் நிகழ்வு-21.01.2019

எமது இல்லக் குழந்தைகளின் உணவுக்கென நன்கொடையாளர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நெற்காணிகளில் கடந்த வருடம் கால போக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு தைப்பூச நன்னாளாகிய இன்று 21.01.2019 அறுவடை ஆரம்ப நிகழ்வு (நெற் புதிர் எடுக்கும் நிகழ்வு) இடம்பெற்றது. இவ் ஆரம்ப நிகழ்வில் இல்லத்தலைவர் பொன். நித்தியானந்தம் ஐயா மற்றும் இல்லத்தின் கெளரவ முகாமைக்குழு உறுப்பினர் திரு. கு. கிட்ணசாமி அவர்களையும் பிரதம நிறைவேற்று அலுவலர் திரு. தே. சுபாகரன் அவர்களையும் இல்லப் பணியாளர்களையும்  படத்தில் காணலாம்.

Read More »