பிறந்தநாள் விழா

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2022 மாசி மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 27.02.2022 அன்று இல்ல தலைவர் திரு. ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு.கடம்பசீலன் அவர்கள் பொறியியலாளர் -யாழ் பல்கலைக்கழகம் மற்றும் உரிமையாளர் நண்பர்கள் விருந்தகம், திருமதி. பரமேஸ்வரன் உதையா தலைமை சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் – கிளிநோச்சி அவர்களும் திரு. கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் கலந்து சிறப்பித்தனர். பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.

குழந்தைகளுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.