ஒளி விழா-2021

எமது மகாதேவா சிறுவர் இல்லத்தின் ஒளிவிழாவானது 26.12.2021 அன்று இல்ல தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் பி.ப 3.00 மணியளவில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியது. இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக அருட்பணி எமில்போல் ஆரோபணம் இளைஞர் இல்லத்தின் தற்போதய இயக்குநர் அவர்களுடன் திரு அ.கேதிஸ்வரன் பிரதி திட்டடமில் பணிப்பாளர் கிளிநொச்சி அவர்களும் திரு கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் திரு பத்மசிறி பொருளாலர் மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மற்றும் எம் இல்ல பழைய மாணவர்கள், ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் 2020ம் ஆண்டுக்கான கராத்தேசுற்றுப்போட்டியில் வடமாகாண ரீதியில் பதக்கங்களை பெற்ற எமது இல்ல குழந்தைகளும், மாவட்டரீதியில் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற எமது இல்ல குழந்தை மற்றும் பயிற்சி ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டன.