ஆண்டு இறுதி விழா 2021

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மேற்பிரிவு மகளிர் இல்லத்தில் 2021 வருட ஒன்று கூடல் நிகழ்வு 24.12.2021ம் திகதி பி.ப 3.30 மணிக்கு நடைபெற்றது.இந்நிகழ்விற்கு இல்லத்தின் தலைவர் மற்றும் செயலாளர் மேற்பிரிவு மகளிர் இல்ல உப நிர்வாக குழு உறுப்பினர்கள், குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வின் போது மேற்பிரிவு இல்ல குழந்தைகளால் விருந்தினர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளையும் அரங்ககேற்றி மகிழ்வித்தனர்.